Friday, September 25, 2009
Navarathri Paadalgal-7
நவராத்ரி பாடல்கள்-௭
கலை யாவும் தருபவளே கலைவாணி
நிலையாகும் நின்னடியே சரணம் (௨) (கலையாவும்)
அனு பல்லவி
இலை மேவும் பனிபோல துயர்நீங்க
மலை போல வேதங்களை தந்தாயே
சரணம்
எண்ணும் எழுத்தும் தந்தவளே
பண்ணும் பாட்டும் கொடுத்தவளே
ஏழிசை தனிலே உறைபவளே
ஏற்றம் தருவாய் கலைமகளே (கலை யாவும்)
-கலாவதி ரெங்கசாமி
Thursday, September 17, 2009
NAVARATHRI PAADALGAL-5
நவராத்ரி பாடல்கள் -௫
பல்லவவி
பாற்கடலில் உதித்த பொற்கொடியே
பத்மத்தில் அமர்ந்த பசும்பொன்னே
அனு பல்லவி
மாலவன் மனங்கவர் மகாலக்ஷ்மியே
ஞாலத்தை காக்கவந்த நாரணன் துணையே
சரணம்
ஆர்பரிக்கும் அலைகடல் உய்யும் ஆதிலக்ஷ்மியே
பார்வலம் செழிக்க செய்யும் தான்யலக்ஷ்மியே
பூரண செல்வந்தரும் தனலக்ஷ்மியே
பாரினில் வெற்றிதரும் விஜய லக்ஷ்மியே
சரணம்-௨
சந்ததி தழைக்க செய்யும் சந்தானலக்ஷ்மியே
முந்தைய வினைவிளக்கும் கஜலக்ஷ்மியே
சுந்தர ரூபமுடை ராஜலக்ஷ்மியே
வந்தனம் செய்தோம் வரலக்ஷ்மியே
--- கலாவதி ரெங்கசாமி
Subscribe to:
Posts (Atom)


