Wednesday, November 16, 2011

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

                                                பல்லவி
அப்புத்தல  அய்யனே  நிதம்  நின்னடி  போற்றினேன்
செப்பு  மொழி  யாவும்  நின் நாமமாக  வேண்டினேன்
                                              அனு பல்லவி
முப்புரமெரித்த  முதல்வனே  முழுமுதல்  ஈசனே
எப்போதுமென்  சிந்தையுரை  திருவானைக்கா வாசனே
                                         சரணம்
இப்புவி மேவும்  ஐம்பூதங்களின்  அரசனே
எப்போதும்  நீருரைகின்ற  ஜம்புகேசனே
தப்பாது   நித்தம்  நின் பாதம்  போற்றிடவே
அப்பனே  நீஎன்றும்  அருளவாயே  ஆண்டவனே
                               -kalaavathy rengassamy 

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

ஸ்ரீ சக்ர நாயகி :

        அன்னை  அகிலாண்டேஸ்வரி   அணிந்திருக்கும்  காதணிகள்  இரண்டும்  இரு ஸ்ரீ  சக்ரங்களாகும்.  ஆதியில்  அன்னை மிக  உக்கிரமுள்ளவளாக  விளங்கினாள்.  அன்னையின்   உக்கிரஹத்தை தணிக்க  ஆதி  சங்கரர்  இரண்டு  ஸ்ரீ  சக்ரங்களை  அம்பாளின்  காதுகளில்  அணிவித்தார்.  அவை  இரண்டும்   அன்னையின்  காதுகளில்  தோடுகளாக விளங்குகின்றன. இச்சக்ரத்தை   அணிவித்த பின்பு  அம்பாள்  உக்ரஹம்  தணிந்து  அருள் பாலிக்கிறாள்.   இது  வேறு  எந்த  ஆலயத்திலும்  இல்லாத  அதிசயமாகும்.