Saturday, August 20, 2011

Janmashtami

ராகம்-ரீதி கௌள                        தாளம்- ஆதி 
பல்லவி 
என்னதான் மாயம்  செய்தாய் மாயவனே 
உன்  சின்ன வாய்  திறந்து  உலகை  காட்டிடவே
அனு பல்லவி
பாலுறை  வெண்ணையை  உண்டாய்  பாலகனே -இந்த 
பாரெல்லாம்  தெரிய என்ன வித்தை செய்தாய் 
சரணம் 
உரலிலே  கட்டினாள் உன் அன்னை உனையே 
உனக்கின்னும்  ஏன்தான்  கள்ளம்  போகவில்லை 
அரவத்தின் மீதேறி  ஆடுகிறாய்  கண்ணா
அதுவென்ன  நர்த்தன  களமோ மாயவனே
(என்னதான்  மாயம்)
-பாடல்: கலாவதி  ரெங்கசாமி 
(ஒலி பதிவு செய்ய பட்டது -நிருத்யமாலிக என்ற  புத்தகத்தில்  இடம் பெட்ட்றது. 


No comments: