ராகம்-ரீதி கௌள தாளம்- ஆதி
பல்லவி
என்னதான் மாயம் செய்தாய் மாயவனே
உன் சின்ன வாய் திறந்து உலகை காட்டிடவே
அனு பல்லவி
பாலுறை வெண்ணையை உண்டாய் பாலகனே -இந்த
பாரெல்லாம் தெரிய என்ன வித்தை செய்தாய்
சரணம்
உரலிலே கட்டினாள் உன் அன்னை உனையே
உனக்கின்னும் ஏன்தான் கள்ளம் போகவில்லை
அரவத்தின் மீதேறி ஆடுகிறாய் கண்ணா
அதுவென்ன நர்த்தன களமோ மாயவனே
(என்னதான் மாயம்)
-பாடல்: கலாவதி ரெங்கசாமி
(ஒலி பதிவு செய்ய பட்டது -நிருத்யமாலிக என்ற புத்தகத்தில் இடம் பெட்ட்றது.


No comments:
Post a Comment