Monday, October 24, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

                                                         திருவானைக்கா - அப்பு தலம்
         
           நாட்டை                              பல்லவி 
தாயே  நீயே  துணை  ஜகன்மாதா
வாய்மொழி  யாவும்  நின்னாமமாஹிட    (  தாயே)
                            அனு பல்லவி  
மாயையில்  மாந்தர்  மூழ்கிடாமலே  
சேய்களை  காக்க திருவுரு  கொண்டாய்   (  தாயே)
                            சரணம்  1 
தேய்கின்ற  நிலவும்  வளர்கின்ற  பிறையும்
ஓய்வின்றி   சுழலும்  இப்புவியும்  பகரும்  
தூய  நின்னடியன்றியே யாவும் 
மாய  உலகில்  நிலையிலாது எனெவே

                            சரணம் -௨
காயம்  இதுவும்  பொய் என உரைக்கும் 
நேய நின் பதியின் நீர்கொண்ட  உறையுள் 
தாயுன்  கருணை  ஞானசக்தி  உலகில் 
சேய்கள்  மெய்ஞானம் பெறவருள்  புரியும்     

                          சரணம்  -௩
அகிலத்தை  காக்கும்  அருள்நிறை  அன்னையே 
சகல  உயிர்களும்  உன்னருள்  பெறவே 
நிகரிலா  நின்னடி  தொழுதோம்  தாயே 
அகிலாண்டேஸ்வரியே  அருள்புரிவாயே   (தாயே)


No comments: