Wednesday, October 19, 2011

Thayumaanavar

                                         தாயுமானவர்   
        
                                              பல்லவி
மலைக்கோட்டைதனில்  மகிழ்வாக  அமர்ந்திட்ட மாணிக்க விநாயகனே 
நிலையான  வளமுடை காவிரியாய்  திருச்சிரப்பள்ளியிலே  திகழ்பவளே 

                                              அனுபல்லவி 
மலைப்புதரும்  மலையதனின்  உச்சிவந்து உன்னடி  தொழுவோரை 
மனக்கவலை  வேரறுத்து  மாட்சிமை  செய்யும்  நின்னடி  தொழுதொமே 
                                                  சரணம்  
மகப்பேறு  காலமதில் மாதொருத்தி   மனமுருகி  அழைத்தவுடன் 
இகபரம்  காக்கும்  ஈசனவன்  இசைந்தோடி  தாயாக  உருமாறி  
சுகப்ரசவம்  ஆகிடவே  துணைபுரிந்த  நின்தந்தை  கோலமதை  
நெகிழ்வுடனே   தரிசிக்க   நின்சந்நிதி  அடைந்தோமே  அருள்வாய்   நீ   (மலைகோட்டை)    - கலாவதி  ரெங்கசாமி .

No comments: